Friday, January 6, 2012

கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்த மகஜர் கையளிப்பு

கடந்த 8.12.2011 அன்று காலை 10மணிக்கு காரைநகர் உ.அ.அதிபர் அலுவலகத்துக்கு வந்த சுமார் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் இம்மகஜரைக் கையளித்துள்ளனர். இம்மகஜரில் குறிப்பிட்டதாவது காரைநகர் மேற்கு விவசாயிகளாகிய நாம் கட்டாக்காலி கால்நடைகளினால் மாபெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். நாம் விதைத்துவைத்த பயிர்களை ஆலய மாடுகள் உட்பட கட்டாக்காலி மாடுகளும், கமக்காரர் மாடுகளும் இரவு வேளைகளில் அழித்து வருகின்றன. இதனால் நாம் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். மிருக வைத்தியரின் சிபார்சுக்கமைய அதற்குரிய உரிமம் கொடுக்கப்படவில்லை. இதனால் பசுமாடுகளானாலும் சரி எருது மாடுகளானாலும் சரி விற்கப்படும் மாடுகளை உடனுக்குடன் பொன்னாலைக்கப்பால் கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும். கட்டாக்காலி மாடுகளை முற்றாகப்பிடிப்பதற்கு தங்களால் ஆன உதவியை வழங்க வேண்டும் என காரைநகர் உதவி அரசாங்க அதிபர் இ.த.ஜெயசீலனிடம் மன்றாட்டமாக கோரியுள்ளனர். இம்மகஜர் கையளிப்பின்போது காரைநகர் பிரதேசசபையின் எதிர்க்கட்சி உறுப்;பினர் திரு.வி.கண்ணனும் காரைநகர் கமநலசேவை உத்தியோகஸ்தர் திரு. க.கலைச்சந்திரனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment