Friday, December 2, 2011

காரைநகரில் கடும்மழை பெய்கின்றது


காரைநகரில் கடும்மழை பெய்கின்றது!
மேலும் தொடருமாயின் வெள்ள அபாயம் ஏற்படும்!
யாழ்குடாநாட்டில் பரவலாக கடும்மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் காரைநகரிலும் கடும்மழை பெய்து வருவதனால் தாழந்த பகுதிகளிலும் வயல்களிலும் வெள்ளம் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும் தொடர்ந்து;    மழை பெய்யுமானால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் காரைநகரில் புதுவீதிச்சந்தி, வேம்படிச்சந்தி,களபுமி பிரதான வீதி, வலந்தலைச்சந்தி ஆகியனவற்றினையும் களபுமிப் பகுதி வயல்கள் நீரினால் நிரம்பிநிற்பதனையும், வெள்ள அனர்த்தம் ஏற்படுவதனை தவிர்க்க பெரிய மதகின் ஒருபகுதி திறக்கப்பட்டிருப்பதனையும் அதனால் வெள்ளம் பாய்வதனையும் படங்களில் கானலாம்.

No comments:

Post a Comment